” ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும்...” வீட்டு திருட்டு சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்த நடிகை...!

” ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும்...” வீட்டு திருட்டு சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்த நடிகை...!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட  விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருப்பதாக நடிகை பார்வதி நாயர், அவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது. 

இதனை தொடர்ந்து அந்த நபர், அவர் மீதான குற்றசாட்டுகளுக்கு தன்னிலை விளக்கமாக, நடிகை பார்வதி நாயர் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தியதாகவும், திருட்டு பட்டம் கட்டுவதாகவும் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார். 

மேலும் படிக்க :  எச்சில் துப்பிய நடிகை ...! ஒவ்வொன்றாக அம்பலமாகும் அவலங்கள்...!

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக, செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : 10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்...! பாஜக பங்கேற்கிறதா...?