விஜய் ஃபோட்டோவை மார்பிங்க் செய்த ரசிகர்கள்...  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை 

விஜய் ஃபோட்டோவை மார்பிங்க் செய்த ரசிகர்கள்...  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை 

கோலிவுட்டின் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் விஜய். சினிமாவை தாண்டி அவரை அரசியலில் இழுக்க ரசிகர்கள் வழிசெய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசியலில் இவருடைய பெயர் அடிபடுவது வாடிக்கையான ஒன்று தான்.

கடந்த தேர்தலின் போது தன்னுடைய வாக்கினை பதிவு செய்ய சைக்கிளில் இவர் வந்தது வைரலானது. சமீபகாலமாக பிற கட்சி தலைவர்களின் படங்களுடன் நடிகர் விஜய் படத்தை இணைத்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.


அதில் நடிகர் விஜய்யை மற்ற தலைவர்களோடு இணைத்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற செயல்களை நடிகர் விஜய் விரும்பவில்லை. ஆதலால் இது போன்ற செயல்களை ரசிகர்கள் செய்ய வேண்டாம்.

மேலும் அவ்வாறு செய்திகள் மீண்டும் தொடர்ந்தால் நடிகர் விஜய் அனுமதியோடு அவ்வாறு செய்பவர்கள் மீது இயக்க ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்று தெரிவித்துள்ளார்.