மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கங்கணா ரணாவத்.. இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு...

அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து நடிகை கங்கனா பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கங்கணா ரணாவத்.. இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு...
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் ஆகியோர் தங்களது 15 ஆண்டு கால திருமண வாழ்வை முறித்துக் கொள்ள போவதாக சமீபத்தில் அறிவித்தனர். அமீர்கான்-கிரண் ராவ் ஆகியோரின் விவாகரத்து குறித்து நடிகை கங்கனா தனது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
அதாவது இந்து பெண்ணாக கிரண் ராவை இஸ்லாமியரான அமீர்கான் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் அவர்களது இரு குழந்தைகளும் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டதாகவும் ஏன் ஒருவர் இந்துவாகவும் ஒருவர் இஸ்லாமியராகவும் வளர்க்கப்பட வில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் இஸ்லாமியரை திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண் ஏன் இந்துவாக தொடர முடிவதில்லை என கேள்வி எழுப்பி, இந்த பழமையான நடைமுறையை நாம் மாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
 
ஒரு குடும்பத்தில் இந்து, சமணம், பவுத்தர்கள், சீக்கியர்கள், ராதாஸ்வாமி மற்றும் நாத்திகர்கள் ஒன்றாக வாழ முடியும் என்றால் ஏன் இஸ்லாமியர்களால் மட்டும் அது முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.