ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடல்...பெருமகிழ்ச்சி தெரிவித்த ராம் சரண்!

ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடல்...பெருமகிழ்ச்சி தெரிவித்த ராம் சரண்!

'நாட்டு நாட்டு...' பாடல் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது பெற்றதை பற்றி 'குளோபல் ஸ்டார்' ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, "இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 'நாட்டு நாட்டு' படத்தின் இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' பட குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து  தெரிவித்த அவர், பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கொரோனா பாதித்தோரை இன்புளுயன்சா தாக்கினால் ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

'நாட்டு நாட்டு' பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. ஒரு சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, 'நாட்டு நாட்டு' இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது என்றும் கூறினார்.

தொடர்ந்து, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்த ராம் சரண், இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!" என்று கூறியுள்ளார்.