மலையாள இளம் நடிகை சரண்யா சசி காலமானார்.!!

மூளை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த இளம் மலையாள நடிகை சரண்யா சசி இன்று காலமானார்.

மலையாள இளம் நடிகை சரண்யா சசி காலமானார்.!!

கடந்த 2007ம் ஆண்டு, சோட்டா மும்பை படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சரண்யா சசி. இவர் மோகன்லால், பாவனா, கலாபவன் மணி, பிரித்திவிராஜ் உள்ளிட்ட மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்ததோடு, ‘கருத்தமுத்து’ உள்ளிட்ட மலையாள டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் மூளை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கென சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் அவருக்கு கொரோனா பாதித்தது.

அதன்பின் அதிலிருந்து அவர் மீண்ட போதும், கொரோனாவுக்கு பிந்தைய விளைவுகளால் அவரது உடல் நிலை மோசமாகி நிமோனியா காய்ச்சல் வந்துள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 35வயதில் காலமானார்.