தனுஷால் நின்று போன நடிகையின் திருமணம்..! வெள்ளைப் பொண்ணின் மனசை மாற்றியதாக கிசு கிசு..!

தனுஷால் நின்று போன ஜிலேபி நடிகையின் திருமணம்..!

தனுஷால் நின்று போன நடிகையின் திருமணம்..! வெள்ளைப் பொண்ணின் மனசை மாற்றியதாக கிசு கிசு..!
எந்த நடிகை, நடிகர்களுக்கு விவாகரத்து அல்லது திருமணம் தடை பட்டாலும் நான் இருக்கேன் என்று ஆதரவு கரம் நீட்டுபவர் இவர் தான். பாரபட்சமின்றி கவலையடைந்த மனத்திற்கு மருந்து போடுவதில் முதல் ஆளாக வந்து விடுவார். சூப்பர் ஸ்டாரின் மருமகன், திரையுலகில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகன் இது போதாதா? 

2002-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானா பீடி நடிகர், துரு துருவென இருந்ததால், அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களை கவர்ந்து வந்தார். 2006-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படம் மூலம் வரவேற்பை பெற்றவர், அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது. இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில், தமிழ் சினிமா துறையில் நிச்சயதார்த்ததுடன் நிற்பதோ அல்லது திருமணம் நடைபெற்று இடையிலேயே பிரிந்தவர்கள் நிறைய உண்டு. மேலும் முன்னணி நடிகைகள் பலரும் இப்படி திக்கு திசை தெரியாமல் காதல் உறவை முறித்த போது இடிதாங்கியாக நின்றது இவர் தான். 90’ஸ்-கள் முதல் இன்று வரை முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருப்பவர் திரிஷா. கடந்த 2015-ம் ஆண்டு தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அந்த ஆண்டு இறுதியே இருவருக்கும் திருமணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நின்றது. அப்போது அவருடைய நிச்சயதார்த்தம் நின்றதற்கு காரணம் பீடி நடிகர் தான் என கூறப்பட்டது. 

அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. இருவரும் 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணமும் அவர் தான் எனக் கூறப்பட்டது. இதனை ஏ.எல்.விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பனே கூறியிருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட அமலாபாலை, தனுஷ் தான் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தார். அதிலிருந்தே அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். 

அடுத்ததாக லிஸ்டில் இருப்பது சின்னத்திரை பக்க பிரபலம். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை என பல கோணங்களில் பிரபலமாக இருக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு இவரது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் 2017-ல் விவாகரத்தில் முடிந்தது. இதற்கு காரணமும் அவர் தான் என கூறப்பட்டது. தனுஷும், டிடியும் பலமுறை ஒன்றாக பார்டிகளில் கலந்து
கொண்டதும், நெருக்கமாக சுற்றியததும் தான் என கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. 

தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜிலேபி நடிகை மெஹ்ரீன் பிர்சடா. சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாடா. அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா, தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவருக்கும், முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தட புடலாக நடைபெற்ற நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென திருமணம் இனி நடைபெறாது என தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார் மெஹ்ரீன் பிர்சடா. இதற்கும் தனுஷ் தான் காரணம் எனக் கிசு கிசுக்கப்படுகிறது. நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் ஏன் திருமணம் செய்துக் கொள்கிறாய்? என நடிகையின் மனதை தனுஷ் கலைத்ததாகவும், இதனால் நடிகை திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  இவ்வளவு ஏன்? சோனியா அகர்வால்-செல்வராகவன் பிரிவுக்கே தனுஷ் தான் காரணம் எனவும், இருவரின் பிரிவிற்கு பிறகு சோனியா அகர்வாலுக்கு தனுஷ் தனி வீடு ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது.. பதனி.. பதனி..