நடிகர் விவேக் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை..........நடிகர் ஆர்யா பேச்சு

அரண்மனை -3 படப்பிடிப்பின்போது நானும், நடிகர் விவேக்கும் 10 கிலோ மீட்டர் வரை தினம்தோறும் நடந்தே செல்வோம் என நடிகர் ஆர்யா  தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை..........நடிகர் ஆர்யா பேச்சு

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை-3  திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்சி அகர்வால், சுந்தர்.சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் ஆர்யா கூறியதாவது, 2 ஆண்டுக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கிறேன் என்றும் முதல் பட சந்திப்பு போல் படபடப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் விவேக் உடன் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தான் ஆசைப்பட்டதாகவும், ஆனால், கடைசி நேரத்தில் தான் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார். மேலும், தினந்தோறும் படப்படிப்பு முடிந்த பிறகு, 10 கிலோ மீட்டர் வரை இருவரும் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும் ஆர்யா தெரிவித்தார்.