கொள்ளையர்களை கண்டு அந்த இடத்தில் பதுங்கிய பாலிவுட் நடிகை!

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பலாத்காரம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பீரோவுக்குள் ஒழிந்துக்கொண்டதாக பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவல் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்களை கண்டு அந்த இடத்தில் பதுங்கிய பாலிவுட் நடிகை!

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பலாத்காரம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பீரோவுக்குள் ஒழிந்துக்கொண்டதாக பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் அண்மையில் படப்பிடிப்பிற்காக  நடிகை நிகிதா ராவல் தங்கியிருந்துள்ளார். அவர் வீட்டில் தனித்து இருப்பதை அறிந்து, மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பின் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை அந்த கும்பல் கொள்ளையடித்தும், அவர்கள் பலாத்கார செயலில் ஈடுபடக்கூடுமோ என்ற அச்சத்தில் பீரோவுக்குள் பதுங்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இருந்து இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை என கொள்ளை சம்பவத்தை விவரித்துள்ள நிகிதா, இதுதொடர்பாக குடும்பத்தினர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.