புதிய உச்சத்தை தொட்டு முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா

இன்ஸ்டகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தனா உயர்ந்துள்ளார்.

புதிய உச்சத்தை தொட்டு முதலிடம் பிடித்த  ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.  

இவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.