சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..தர்ணாவில் ஈடுபட போவதாக எச்சரிக்கை

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக டிக்டாக் பிரபலங்கள் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..தர்ணாவில் ஈடுபட போவதாக எச்சரிக்கை

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த டிக்டாக் பிரபலமான சிக்கந்தர் என்பவரை, மற்றொரு டிக்டாக் பிரபலமான சூர்யா தேவி என்பவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, செருப்பால் அடித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.   

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் அளித்த புகாரின் அடிப்படையில், சூர்யா தேவி மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறி, சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சூர்யாதேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் அளிக்க உள்ளதாகவும்,  தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
.