ரசிகர்களின் செயலால் மேடையிலேயே கண்ணீர் வடித்த சாய் பல்லவி...!!!

ரசிகர்களின் செயலால் மேடையிலேயே கண்ணீர் வடித்த சாய் பல்லவி...!!!

கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்க்கும் கதாநாயகிகளுக்கு மத்தியில் முழுக்க முழுக்க நடிப்பு, நடனம் என தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்தி எந்தவிந்த பின்புலமும் இன்றி தென்னிந்திய சினிஉலகில் முன்னணி நாயகியாக வலம்வருபவர் சாய் பல்லவி.

வெளிமாநிலத்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவில் கோவை மருத்துவர் கோடி நாட்டியுள்ளது அதிசயத்தக்க விஷயம்தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் சாய்பல்லவி தற்போது தெலுங்கில் ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. 

அந்த ட்ரைலரை பார்த்த பலர் இது மறுஜென்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜாக்கி சானின் தி மித் படத்தின் தழுவல் போல் உள்ளது என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இது முற்றிலுமாக வேறு ஒரு கதை என்று படக்குழு மறுப்பளித்திருந்தது. திரைப்படத்தின் பல தொழிற்நுட்ப விஷயங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்த நிலையில் குறிப்பாக இந்த படத்தில் ஒரு தேவதாசியாக நடித்துள்ள சாய் பல்லவியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இது அவரின் திரையுலக பயணத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற  24 வெளிவரவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் தொழிற்நுட்ப கலைஞர்கள் என அணைத்து படக்குழுவும் கலந்து கொண்டிருந்தினர். அந்த நிகழ்வில் துவக்கத்தில் பேசிய இயக்குனர் ராகுல் சன்கிருத்யன், படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறினார். இந்த படத்தில் சாய் பல்லவியின் அட்டகாசமான நடிப்பை டைரக்டர் பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது ரசிகர்கள் சாய் பல்லவி நடித்த படங்களில் கேரக்டர்களின் பெயர்களை சொல்லி அழைத்து,  மேடையில் அமர்ந்திருந்த சாய் பல்லவியை பார்த்து இடைவிடாமல் கூச்சலிட்டு கோஷம் போட்டு அரங்கத்தையே அதிர வைத்தனர்.

படத்தின் நாயகனான நானிக்கு கூட இவ்வளவு கூச்சல் வராத வேளையில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் சாய் பல்லவிக்கு அப்படி ஒரு சத்தம்  இதைப்பார்த்து புல்லரித்து போன சாய் பல்லவி ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போய் மேடையில் அனைவரின் முன்னிலையிலும் கண் கலங்கி அழுக துவங்கினார். 

கண்ணீரோடு பேசிய அவர், இந்த அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் நடிப்பதற்கு என்னை விட திறமையான பலர் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பும், புகழும் கிடைக்கிறது.

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்காக டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று மனம் நெகிழ கூறினார்.  எமோஷனலாகி அழுத சாய் பல்லவியை நானி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். சாய் பல்லவிக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து மேடையில் அமர்ந்திருந்த மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்.