ஒரே ஒரு ஐட்டம் சாங்கை வைத்து பாலிவுட்டில் கமிட்டான சமந்தா.. அதுக்குனு இத்தனை படங்களா.?

ஹிந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சமந்தாவை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரே ஒரு ஐட்டம் சாங்கை வைத்து பாலிவுட்டில் கமிட்டான சமந்தா.. அதுக்குனு இத்தனை படங்களா.?

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. கேரியர் தான் முக்கியம் என பர்சனல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முழு நேரமாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

தற்போது தமிழில் காத்து வாக்­குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தெலுங்கில் சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமந்தா அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் மூன்று படங்களில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் தொடருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த தொடருக்கு வரவேற்பு அளித்தனர். அதன்மூலம் சமந்தாவிற்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி ஹிந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சமந்தாவை அணுகியுள்ளதாம். அதுவும் ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதமும் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. 

தெலுங்கு படத்திலேயே சமந்தா பயங்கர கவர்ச்சி காட்டுவார். இதுல ஹிந்தினா சொல்லவா வேண்டும். ஊ சொல்றியா மாமா பாட்டோட ஹிட்டு தான் இந்த பாலிவுட் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருக்கும் என சிலர் கூறி வருகிறார்கள்.