மகன் சிறை கேண்டீனில் செலவழிப்பதற்காக பணம் அனுப்பி வைத்த ஷாருக்கான்....

போதை பொருள் வழக்கில் சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன் கானுக்கு ஷாருக்கான் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார்.

மகன் சிறை கேண்டீனில் செலவழிப்பதற்காக பணம் அனுப்பி வைத்த ஷாருக்கான்....

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் ஆர்யன் கானை கைது செய்து மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

ஷாருக்கான் வீட்டில் இருந்து ஆர்யனுக்கு உணவு சமைத்துக்கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகள் வீட்டில் சமைத்த உணவை கொடுக்க அனுமதி மறுத்தவிட்டனர். சிறையில் உள்ள கேண்டீனில் ஆர்யன் கான் செலவழிப்பதற்காக ஷாருக்கான்  4500 ரூபாய் அவருக்கு மணியார்டர் அனுப்பி வைத்துள்ளாராம். மேலும் சிறை விதிகளின்படி வீடியோ காலில் மகனுடன் ஷாருக் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளார். 

சிறை விதிகளின்படி ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 4,500 மணியார்டர் அனுப்ப விதிமுறைகள் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாரணைக் கைதிகளை உறவினர்கள் பார்க்க அனுமதி இல்லை. கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து ஷாருக்கான் அவரது மனைவி கவுரிகான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.