நீ கசமுசா படம் எடுத்ததுக்கு நான் என்னடா பண்ணேன்? கணவரிடம் சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி... 

ஆபாச படங்களை எடுத்து அதனை இணைய செயலியில் பதிவேற்றியது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும்  தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீ கசமுசா படம் எடுத்ததுக்கு நான் என்னடா பண்ணேன்? கணவரிடம் சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி... 

ஆபாச படங்களை எடுத்து அதனை இணைய செயலியில் பதிவேற்றியது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும்  தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணையில் வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர். 

ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த 24 ஆம் தேதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர். 

அப்போது ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதம் செய்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றன. போலீஸார் சென்ற போது ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தத்துடன் இருந்ததாகவும் அப்போது தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது. 

குந்த்ராவின் செயலால் குடும்பத்துக்கு அவப்பெயர் வந்ததோடு துறையில் பல வாய்ப்புகளும் பறிபோயுள்ளன, பண ரீதியாகவும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது, சமூகத்தில் நாம் நல்ல நிலையில் இருந்தும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி சராமாரியாகக் கேள்வி கேட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.