திடீரென நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் போட்ட ரஜினிகாந்த்... எதற்காக தெரியுமா..?

பிரபல இயக்குனருக்கு நள்ளிரவில் திடீரென போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்....!

திடீரென நள்ளிரவில் பிரபல இயக்குனருக்கு போன் போட்ட ரஜினிகாந்த்... எதற்காக தெரியுமா..?

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் “மாமனிதன்” திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார். ”தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் தொடங்கி ”கண்ணே கலைமானே” திரைப்படம் வரை பல வெற்றிப்படங்களை தந்த சீனுராமசாமி தற்போது “மாமனிதன்” படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தபடத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ’மாமனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதை பகிர்ந்துக்கொண்டார்.

அதாவது ‘நள்ளிரவு 3 மணிக்கு திடீரென எனக்கு ஒரு போன் வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென படத்தை பாராட்டி விட்டு மனம் திறந்து என்னிடம் பேசினார். குறிப்பாக விஜய் சேதுபதி, காயத்ரி அவர்களின் நடிப்பை அவர் பாராட்டினார். நான் அவருக்கு பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன், ‘ரொம்ப தெம்பா இருக்குது சார், நன்றி என்று சொன்னேன். 

இப்படி திடீரென அவர் போன் செய்து பாராட்டிய விஷயத்தை யாரிடம் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. அதனால் தூங்கிக்கொண்டிருந்த எனது மனைவியை எழுப்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீரென ’மாமனிதன்’ படத்தை பாராட்டியதை கூறி செல்போனை காண்பித்தேன் இவ்வாறு அவர் பேசினார். மேலும் பேசிய அவர், விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இல்லாமல் ’மாமனிதன்’ படம் உருவாகியிருக்காது என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் சீனுராமசாமி கூறினார்.