நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அலறவிட்ட நடிகை...ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்...!!

நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அலறவிட்ட நடிகை...ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்...!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் படத்திலேயே தனது அசாதாரண நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர், அதனைதொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன் , கதாநாயகன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.  

 தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வரும், இவர்  தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'அருவம்' படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

கவர்ச்சி காட்டுவதிலும் எல்லை மீறாமல் அளவுடன் காட்டிவரும் கேத்ரின் தெரசா கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு தமிழில் நடிப்பது குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது மூன்று தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் கேத்ரின் தெரசா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகை கேத்ரின் தெரசா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.