விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்.. ட்விட்டரில் இயக்குநர் சந்திரமௌலி வருத்தம்..!

டெல்லி விமான நிலையத்தில் ராஜமௌலி சந்தித்த மோசமான அனுபவம்!!

விமான நிலையத்தில் நடந்த மோசமான சம்பவம்.. ட்விட்டரில் இயக்குநர் சந்திரமௌலி வருத்தம்..!
பாகுபலி படம் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் இயக்குநர் சந்திரமௌலி. தெலுங்கு சினிமாவில் மிகவும் வித்தியாசமான படங்கள் கொடுத்து அசத்தி வருபவர். தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர்களான சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். 

 
அண்மையில் டெல்லிக்கு பயணம் சென்ற அவர், அங்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகாலை 1 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்ற அவருக்கு, ஆர்டிபிசிஆர் சோதனைக்காக படிவம் ஒன்றை கொடுத்து பூர்த்தி செய்யக் கூறியுள்ளனர். பயணிகள் அனைவரும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் படிவங்களை பூர்த்தி செய்யும் நிலை இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். 

பயணிகளின் காத்திருப்பு அறையில் சிறிய மேஜைகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விமான நிலையத்திற்கு கீழே தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள ராஜமௌலி, வெளிநாட்டு பயணிகளுக்கு இந்தியா மீதான முதல்பார்வை எப்படி இருக்கும் எனவும், தயவு செய்து அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.