சிம்பு கிட்ட வம்பு பண்ணும் தியேட்டர் உரிமையாளர்கள்.... வளச்சு வளச்சு செஞ்சா என்னதான் பண்ணுவாரு.!!

தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவால் சிம்புவின் மாநாடு படத்திற்கு தற்போது புதிய தடங்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சிம்பு கிட்ட வம்பு பண்ணும் தியேட்டர் உரிமையாளர்கள்.... வளச்சு வளச்சு செஞ்சா என்னதான் பண்ணுவாரு.!!

தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவால் சிம்புவின் மாநாடு படத்திற்கு தற்போது புதிய தடங்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாநாடு.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக வேண்டியது. ஆனால் ரிலீஸை நவம்பர் 25ம் தேதிக்கு படக்குழுவினர் ஒத்தி வைத்தனர்.

மாநாடு படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசிக்க சிம்பு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிம்புவின் மாநாடு படத்திற்கு தற்போது புதிய தடங்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது

தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வோர் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களால் மட்டுமே மாநாடு படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து அறிந்த மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில், உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை என்றார்.

அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! என்றார்.

முன்னதாக, எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுக்கிறாங்க. பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மாநாடு பட விழாவில் ரசிகர்களிடம் கூறி கண்ணீர்விட்டார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.