சாரி சுரேஷ் தாத்தா... மோதல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா

பிரபல நடிகையான வனிதா, மோதல் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சாரி சுரேஷ் தாத்தா... மோதல் காரணமாக  நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா

பிரபல நடிகையான வனிதா, மோதல் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு, பிரபல தொலைக்காட்சி தமக்கு மற்றொரு வீடாக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொலைக்காட்சி நிறுவனத்தோடு தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்து கொள்கிறார்கள் என கடுமையாக தெரிவித்துள்ள நடிகை வனிதா, பல ஆண்டுகள் அனுபவம் மிக்க சீனியர் ஒருவர், தம்மை விட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது தமக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு தமது வாழ்த்துகள் என்றும், தம்மால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.