அசிங்கமான பேச்சால் அரங்கை அதிரவைத்த வனிதா....கொந்தளித்த நடுவர் நகுல் ...

பல சர்ச்சைகளையும் பரபரப்புகளையும் அவ்வபொது கொடுத்து வரும் வனிதா..தான் அம்மன் வேடன்போட்டு பங்கேற்ற பிக்பாக்ஸ் போட்டியின் நடுவர்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுலை செட்டில் வைத்தே அசிங்கமாக திட்டி மீண்டும் சர்ச்சையின் உச்சிக்கே சென்றுள்ளார்…..  

அசிங்கமான பேச்சால் அரங்கை அதிரவைத்த வனிதா....கொந்தளித்த நடுவர் நகுல் ...

வனிதா விஜயகுமார் என்றால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது. அவர் நடிகர் விஜயகுமாரின் மகள்.  1995-ல் விஜய்யின் சந்திரலேகா படத்தில் வனிதா அறிமுகமானார். அதன்பிறகு வனிதா நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

பின்னர் மீண்டும் பிரபலங்கள் மத்தியில் முகத்தை வெளிகொண்டு வர நினைத்த வனிதா. பிக்பாக்ஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பிரபலமானார். இந்த அறிமுகம் பத்தாது வெறு எதாவது செய்து மக்கள் நினைவில் என்றுமே நிங்கா இடம் பிடித்தாக வேண்டும் என்று முடிவெடுத்தாரோ என்னவோ.. 

பீட்டர்பால் என்பரை மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்டார்.. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பீட்டர்பாலுவிற்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் மீண்டும் அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்று முடிவெடுத்து சர்ச்சையில் சிக்க  முடிவெடுத்தது தான்.. 

இவர்கள் இருவரின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றினர். எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், எதர்க்கும் அஞ்சாமல் இருந்த வனிதா, பீட்டர்பால் திருமணம் மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்தது.. 

அவ்வப்போது பல பிரச்சனைகளில் அடுக்கடுக்காக சிக்கி வந்த வனிதா விஜயகுமாருக்கு சர்ச்சை பேச்சுகள் மட்டுமல்ல சமையல் திறமையும் உள்ளது என்பதை உலகிற்கே உணர்த்தியது தான் 'குக் வித் கோமாளி' சீசன் 1 நிகழ்ச்சி   

அதன்பிறகு வழக்கம் போல் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பினார். அந்தவகையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடினமாடி வந்தார் சர்ச்சை நாயகி வனிதா. 

அதில் வனிதா காலி வேடம் போட்டு நடனம் ஆடினார். இறுதியில் இவரது நடனத்தை நடுவர்களாகிய ரம்யாகிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் மற்ற நடன கலைஞர்களுடன் ஓப்பிட்டு விமர்ச்சனம் செய்துள்ளனர். இதனால் கொதித்தெளுந்த வனிதா அசிங்கமான வார்த்தைகளால் இருவரையும் திட்டி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கினார். 

இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நடிகரும் நடுவருமான நகுல், வனிதா என்னை அசிங்கமாக திட்டியதை கூடி பொருத்துக்கொள்வேன் ஆனால் ரம்யா கிருஷ்ணன் திட்டியதற்கு மன்னிப்பு கூறியே ஆக வேண்டும் என கொந்தளித்துள்ளார்..