நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட் 

நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவின் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட் 

தமிழ் திரையுலகில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை நயன்தாரா வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார்.

கொரிய மொழியின் வெளியான 'ப்ளைண்ட்' எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் இப்படத்தை திரையிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மிலிந்த் ராவ் எனும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தில், கண் பார்வையற்ற ஒரு பெண் தனது இதர திறமைகளைக்கொண்டு தொடர்ந்து கொலையில் ஈடுபடும் குற்றவாளி ஒருவரை கண்டுபிடிப்பதே கதையின் மையமாக அமைத்துள்ளது.