ஆக.5-ம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம்...!

ஆக.5-ம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம்...!

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் களமிறங்குவது குறித்து நடிகர் விஜய் இதுவரை நேரடியாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும்கூட, அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அதை சார்ந்தே உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி கேரள ரசிகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  

இதையும் படிக்க   |  ஓடிடி தளங்களுக்கு தணிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!