அப்படி என்ன தாம்பா சொன்னாரு 'அபிநய்'?? கொந்தளித்த "தாமரை"!!... அனல் பறக்கும் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை செல்வி கடும்கோபத்தில் பேசிய வார்த்தை பார்க்கும் அனைவரையும் மிரள வைத்துள்ளது..

அப்படி என்ன தாம்பா சொன்னாரு 'அபிநய்'?? கொந்தளித்த "தாமரை"!!... அனல் பறக்கும் அல்டிமேட்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தற்போது பெரும் அளவில் அனைவராலும் பார்க்கப்பட்டுவருகிறது.  அதில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் கட்டம் வாரம் வாரம் நடைபெறும்.. அதில் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியுன் வெளியேறினார். மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எப்போதும் ஒருவர் தான் ஒரு வாரத்திற்கு வெளியேறுவார். அதில் யார் வெளியேற போகிறார்கள் என அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றம் என்ற சொன்னதும் அந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதன் படி, இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில், இந்த வாரம் யார் சரியாக பெர்பாமன்ஸ் செய்ய வில்லை என அனைவரும் தேர்வு செய்து கூறும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, அனைவரும் தாமரை செல்வி, நிரூப், சுருதி என மூன்று பேரை அனைவரும் கூறியுள்ளனர்.. 

தேர்வு செய்த பின்னர் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் கேட்டதும்.. அதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர்.. ஆனால், அபிநய் தாமரை செல்வி மற்றும் இரு போட்டியாளர்களையும் வீட்டை விட்டு வெளியில் படுக்க சொல்லி இருக்கிறார்.

உடனே கொந்தளித்த தாமரை செல்வி., 'அபிநய்' யாரு என்னை வெளியே போக சொல்ல... எனக்கும் கோவம் வந்துச்சுன்னா அவ்வளவுதான் என செம்ம கோபத்தில் பேசியுள்ளார்.. ஏற்கனவே அபிநய் மற்றும் தாமரை செல்வி இடையே பிரச்சினை இருக்கும் நிலையில் இன்று சரியான பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.