யாஷிகா இப்போ எப்படி இருக்கிறார்... அவரே பதிவிட்ட புகைப்படம் வைரல்

யாஷிகா இப்போ எப்படி இருக்கிறார்... அவரே பதிவிட்ட புகைப்படம் வைரல்

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த்,  இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பின் பட வாய்ப்புகள் அவருக்கு வர, கை வசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார். இந்த பார்ட்டியை முடித்து விட்டு மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இடித்த வேகத்தில் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

யாஷிகாவின் உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. யாஷிகா தற்போது மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

அதில் யாஷிகா காலில் பெரிய கட்டுடன் பெட்டில் படுத்து இருக்கிறார். யாஷிகாவின் தாயார் மற்றும் அவரது செல்லப்பிராணி என மூவரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை யாஷிக்காவின் ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர்.