டிடி-க்கு முடக்கு வாதம்.... மீண்டும் வீல் சேரில் அமர்ந்தபடி வெளியான புகைப்படம்
தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்களிடம் நல்ல வரவேற்பையும், தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரை வட்டாரங்களில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்றால் அது டிடி தான்.
நெருங்கிய நண்பரான ஒருவரை கடந்த காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்த கொஞ்ச நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்னர் அவர் தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமல்லாது அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எடுத்த விதவிதமான புகைப்படங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வந்தார். இந்தநிலையில் திவ்யதர்ஷினி வீல் சேரில் அமர்ந்தபடி மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது.
முதலில் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிடி கீழே விழுந்ததாகவும் அவருக்கு தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டதாகவும் நினைத்தனர். ஆனால் தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை எனவும் அதற்கு காரணம், முடக்கு வாதம் எனவும் தெரிவித்துள்ளார்.