இது தோல்வியல்ல! முடிக்கப்படாத வெற்றி- மஹா இயக்குனர் ஜமீல் எழுதிய கடிதம்:
தற்போது வெளியாகியுள்ள மஹா படத்தின் இயக்குனர் யு. ஆர். ஜமீல், படத்தைக் குறித்த தனது நிரைவேறாத கனவுகளைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
அறிமுக இயக்குனர் யு. ஆர். ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் தான் மஹா. ஜிப்ரான் இசையமைப்பில் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட இந்த படமானது, வி மதியழகனின் எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இந்த ஜூலை 22ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படமானது, சில காரணங்களால் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஹன்சிகாவுடன், சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆதமன் சிலம்பரசனுக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருந்தது. மதுரையில் சிலம்பரசனின் ரசிகர்கள், பாலத்தின் மேல், 1000 அடிக்கு ஃப்ளெக்ஸ் அடித்து பெரிய அளவில் கொண்டாடினர்.
மேலும் படிக்க: நடிகர் சிம்புவுக்கு 1,000 அடி நீளத்திற்கு ப்ளக்ஸ்..! மதுரை பாய்ஸ்சின் பாசத்தில் நனைந்த சிம்பு..!
இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இயக்குனர் ஜமீல், ஒரு உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த கடித்த்தில் குறிப்பிட்டதாவது, “சில கதைகளை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். அது போன்ற கதை தான் மஹா. இந்த கதையின் திரைக்கதையை முடித்தவுடன் எனக்குத் தெரிந்தது, சுமார் 7 1/2 வருடங்களாக கஷ்டப்பட்டு உருவாக்கி, 5 வருடத்திற்கு முன்பே ஒப்பன்ஹம் கையெழுத்தானது. எனது முதல் படம் இது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடனான எனது கருத்து வேறுபாடுகள் பற்றி நான் மீண்டும் பேச விரும்பவில்லை. இறுதி வரை, என்னுடைய முழு உழைப்பை நம்பி, எனது திரைக்கதைக்காக சண்டை போட்டேன். ஆனால், ஒன்றரை வருடப் போராட்டத்திற்குப் பிறகு தான் புரிந்தது, என்னால் தனித்து சண்டையிட முடியாதென்று. அப்படி வெளியானது தான் இந்த படம். இருந்தாலும், சிலம்பரசன் டி ஆர் மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறை படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வரும்போது பெரிய வரவேற்பைக் கொடுத்தார்கள். எனது ஐந்து வருட உழைப்பை, எனக்கே தெரியாமல் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்காக சீக்கிரம் வெளியிட நினைத்த எனக்கே இந்த படம் குறித்த எந்த தகவலும் இல்லாதது மன வருத்தத்தைத் தெரிகிறது. இருப்பினும், மஹா குழுவிறு எனது வாழ்த்துகள்” என்று முடித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம், ஜமீலுக்குத் தெரியாமலேயே படம் வெளியானது என்பது தெரிகிறது. படம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும், இந்த தகவல், ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.