இளம்பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. புகார் கொடுத்தும் பயனில்லை... பழைய காதலி கண்ணீர் புகார்.!!!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும், விசாரணை முடியும் வரை  நடிகர் ஆர்யாவின் புதிய படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈழத்தமிழ் பெண் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. புகார் கொடுத்தும் பயனில்லை... பழைய காதலி கண்ணீர் புகார்.!!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடித்த ‘சார்பட்டா’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆர்யா. சமீபத்தில் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் குழந்தை பிறந்ததையடுத்து திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் நடிகர் ஆர்யா மீது ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகூறி கொஞ்சம் கொஞ்சமாக 71 லட்சம் ரூபாயை வெஸ்டர்ன்யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமலும், நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்து கொண்டு தனது பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக புகார் செய்திருந்தார்.

பணம் பெற்றதற்கு ஆதாரமான பணபரிவர்த்தனை ஆவணங்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆர்யா வாட்ஸ்அப்பில் வாக்குறுதி அளித்த சாட்டிங் விவரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்தவாறே, சென்னை மெஜஸ்டிக் லா பார்ம் வழக்கறிஞர் ஆனந்தன் மூலமாக , ராஜபாண்டியன் என்பவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா.

அதில் ஆர்யா தன்னிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை, அவர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை, மலையாளப்படமான ரெண்டகம், ஒட்டு மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களுக்கு பயன்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

எனவே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜாவின் புகார் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை ஆகஸ்ட் மாதம் 17ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.