தனுஷ் -  ஐஸ்வர்யா விவகாரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் மறைமுக ரியாக்சன்!!

தனுஷ் -  ஐஸ்வர்யா விவகாரத்துக்கு மறைமுகமாக  பதிலளித்த செளந்தர்யா ரஜினிகாந்த்.

தனுஷ் -  ஐஸ்வர்யா விவகாரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் மறைமுக ரியாக்சன்!!

தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வருவதால், என்ன காரணம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். நாகசைதன்யா - சமந்தா, இசையமைப்பாளர் இமான் ஆகியோர் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் இன்று தனுஷும் தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்து இருப்பது திரையுலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய போவதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே தகவலை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தனுஷின் விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் சகோதரி செளந்தர்யா தனது சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் டிபி புகைப்படத்தை மாற்றியுள்ளார். அதில் தானும் தனது சகோதரி ஐஸ்வர்யாவும் சிறுமிகளாக இருந்தபோது தங்கள் தந்தை ரஜினிகாந்த் தங்களை கைகளில் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் கேப்ஷன் எதையும் செளந்தர்யா பதிவு செய்யவில்லை என்றாலும் மறைமுகமாக பல விஷயங்களை சுட்டிக் காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்.