தந்தை, மகன் வேடத்தில் ரிஸ்க் எடுக்கும் சூர்யா..! பிகில் படத்தை போன்றே அமைந்து விடுமோ?

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தந்தை-மகனாக சூர்யா?

தந்தை, மகன் வேடத்தில் ரிஸ்க் எடுக்கும் சூர்யா..! பிகில் படத்தை போன்றே அமைந்து விடுமோ?

சூரரைப்போற்று வெற்றிப் படத்திற்கு பிறகு நவரசா படத்தில் ''கிட்டார் கம்பி மேலே'' ஆந்தாலஜி படத்தில் நடித்து முடித்தார் சூர்யா. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ''வாடிவாசல்'' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படம் தயாராகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் ''ஃபர்ஸ்ட் லுக்'' போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அப்பா, மகன் என இரு வேடத்திலும் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடிகர் விஜய் பிகில் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நடிகர் சூர்யா கூட, வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் அப்பா, மகன் என சூர்யாவை இரட்டை வேடத்தில் பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். 

அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில்,  நடிகர் சூர்யா அடுத்த மாதம் முதல் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.