நவம்பர் 21-ம் தேதி ஜெய்பீம்..! அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீசாகும் சூர்யா படங்கள்..!

தியேட்டர் உரிமையாளர்களிடம் மேலும் பகையை வளர்க்கும் சூர்யா..!

நவம்பர் 21-ம் தேதி ஜெய்பீம்..! அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீசாகும் சூர்யா படங்கள்..!

சூர்யா வழக்கறிஞராக நடித்து வரும் 'ஜெய்பீம்' திரைப்படத்தை இந்தாண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக 'அமேசான் பிரைம்' அறிவித்திருக்கிறது. 

’சூரரைப் போற்று’ வெற்றிக்கு பிறகு சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் ரிலீசான போது, தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யாவின் படங்களை இனி திரையிட மாட்டோம் என அறிவித்தனர். தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ததாக சூர்யா விளக்கமும் அளித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது மீண்டும் சூர்யாவின் அடுத்த படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஞானவேல் இயக்கத்தில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிமெண்ட் தயாரிப்பில் உருவாகும் படம் ’ஜெய்பீம்’. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்தில் நடிகர் அருண்விஜய்யின் மகன் அறிமுகமாகிறார் என்ற தகவலும் வெளியானது. இதனால் மக்களும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ’ஜெய்பீம்’ திரைப்படம் இந்தாண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக ’அமேசான் பிரைம்’ அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி படமான ’நவராசா’வில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ’கிதார் கம்பி மேலே நின்று’ என்ற காதல் ரசத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த ஆந்தாலஜி படமும் நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகிறது.