நம்பாதீங்க... எல்லாம் பொய், பொய்... வடிவேலு அதிரடி பதில்

தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு,தன்னைப் பற்றி இணையத்தில் வரும் பதிவுகள் பற்றி அதிரடியாக கூறியிருக்கிறார்.

நம்பாதீங்க... எல்லாம் பொய், பொய்... வடிவேலு அதிரடி பதில்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைபுயல் வடிவேலு.இவர் நகைசுவைக்கென்றே வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

இதற்கிடையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என்றும்,அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் வடிவேலு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு கணக்குகள் கிடையாது, எனது பெயரில் வெளியாகும் பதிவுகள் அனைத்தும் போலியானவை என்று  அதிரடியாக கூறியிருக்கிறார்.