மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு...

புதுச்சேரியில் மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு...

புதுச்சேரியில் மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அந்த தடை உத்தரவின்படி 3 கிராமங்களிலும் 5 பேருக்கு மேல் நடமாடக்கூடாது. தேவையின்றி எங்கும் கூட்டம், போராட்டம் ஆகியவை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை அதே போல் 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.