ஹிஜாப்பை தொடர்ந்து இந்து அமைப்புகள் தரப்பில் ”ஸ்ரீரங்கப்பட்டணா சலோ” பேரணி - 144 தடை உத்தரவால் போலீசார் குவிப்பு!
கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டினா என்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களையும் மசூதிகளையும் குறிவைத்து தொடர் சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரமான ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஜாமியா மசூதிக்குள் நுழைந்து இன்று பூஜை நடத்த போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இதற்கு ”ஸ்ரீரங்கப்பட்டணா சலோ” என பெயரிட்டு இந்துக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்துக் கொள்ள இந்து அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசூதி அமைந்துள்ள பகுதி அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Karnataka | Section 144 CrPC imposed in Srirangapatna town of Mandya district from 6 am to 6 pm today in wake of 'Srirangapatna Chalo' call given by VHP for today.
— ANI (@ANI) June 4, 2022
Over 500 police personnel deployed, 4 check posts installed. Route march taken out in the presence of SP N Yatish. pic.twitter.com/vBMXQ3GXpO