குஜராத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 19 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் குஜராத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 19 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் குஜராத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் துறைமுகம் வழியாக 2 கண்டெய்னர்களில் இந்தப் போதைப்பொருள் குஜராத் மாநில துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. கப்பலின் 2 கண்டெய்னர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஹெராயின் போதைப்பொருள் ஆந்திராவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆப்கன் நாட்டி சேர்ந்த சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரே சமயத்தில் இந்த அளவு போதைப்பொருள் பிடிபட்டதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.