மாடல் நடிகை வீட்டில் 20 கோடி ரூபாய்! யார் இந்த அர்பிதா முக்கர்ஜீ?
விளம்பரங்களில் நடிக்கும் மேற்கு வங்க மந்திரி பார்த்தாவின் உதவியாளராக இருக்கும் அர்பிதா முக்கர்ஜீ வீட்டில் 20 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரைத் தற்போது கைது செய்துள்ளனர்.
அமலாக்க இயக்குனரகம் (ED) மேற்கு வங்கத்தில் மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியது. அதில், மூத்த அமைச்சரின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் மாடல் அழகி அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை மீட்டியுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க இயக்குனரகம் இன்று மாலை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சட்டர்ஜியை ED முன்பே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “அர்பிதா முகர்ஜீயின் இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, அமலாக்க இயக்குனரகம் சுமார் 20 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தது. மேலும், 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. SSC ஊழலில் சம்மந்தபட்ட பணமாக அவைக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட சேட்டர்ஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சேட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.” என கூறுகிறது.
சேட்டர்ஜியை கொல்கத்தாவில் கைது செய்த அமலாக்க இயக்குனரகம், சாள்ட் லேக் ஏரியா பகுதியில் இருக்கும் CGO காம்ப்ளெக்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Rs. 20 crore cash recovered by @dir_ed from the residence of Arpita Mukherjee; close aide of WB Education Minister Partha Chatterjee in the SSC scam case.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 22, 2022
Sources claim that piles of cash were found inside WB Govt Education Ministry envelopes with
National Emblem printed on them. pic.twitter.com/xLsWQeVzL2