"3க்கு 3.. கணக்கு கரெக்ட்டா"... பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுண்டர்!! யார் அந்த 3 பேர்?

ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

"3க்கு 3.. கணக்கு கரெக்ட்டா"... பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுண்டர்!! யார் அந்த 3 பேர்?

ஜம்மு காஷ்மீரில், அடுத்தடுத்து 3 பஞ்சாயத்து தலைவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தீவிரவாதிகளை களை எடுக்கும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், ஸ்ரீநகர் மாவட்டத்தின் நவ்காம் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும், பஞ்சாயத்து தலைவர் சமீர் அகமது பட் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.