இருவேறு கொலை வழக்குகளில் தேடப்படும் 4 பேர்: உதவுவோருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை..!

மேற்குவங்கத்தில், இரு வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை  வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. 

இருவேறு கொலை வழக்குகளில் தேடப்படும் 4 பேர்: உதவுவோருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை..!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின்போது, சிதால்குச்சி மற்றும் நல்ஹாட்டி பகுதிகளில் இரு வேறு கொலைகள் அரங்கேறின. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சிலரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான சோட்டன், பரூக் அலி  உள்ளிட்டோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஜாமீன் இல்லாத கைது வாரண்டும் பிறக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த 4 பேர் பற்றி தகவல் கொடுப்போருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், தகவலை இமெயில் அல்லது போன் வழியாகவும் தெரிவிக்கலாம் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.