44 நக்சலைட்டுகள் போலீசில் சரண்... விருந்து ஏற்பாடு செய்த போலீசார்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 44 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

44 நக்சலைட்டுகள் போலீசில் சரண்... விருந்து ஏற்பாடு செய்த போலீசார்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகளவில் உள்ள நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் பல நக்சலைட்டுகள், தங்களது ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழத் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சுக்மா மாவட்டம் சின்தல்னர் கிராமத்தை சேர்ந்த 9 பெண்கள் உள்பட 44 நக்சலைட்டுகள், தங்களது ஆயுதங்களை கைவிட்டு போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர். திருந்தி வாழ்வதற்காக அவர்கள் அனைவருக்கும் தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சரணடைந்த நக்சலைட்டுகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு போலீசார் விருந்து ஏற்பாடு செய்தனர்.