36 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..பாதுகாப்புப்படையினர் அதிரடி.! 

36 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..பாதுகாப்புப்படையினர் அதிரடி.! 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள சுந்தர்பன் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை மூண்டதில், பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.  

இதேபோல் புல்வாமா, குல்காம் மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊருடுவப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த ஜூன் 29ம் தேதி முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சோபூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்குவதற்கு பயன்படுத்திய கட்டடத்தை பாதுகாப்பு படையினர் இடித்து அகற்றினர். அங்கிருந்து  வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.