எல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த 8 பேர் கைது..! தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்..!

எல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த 8 பேர் கைது..! தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்..!

தனுஷ்கோடி தலைமன்னார் சர்வதேச இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக இலங்கையைச் சேர்ந்த 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைது செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தலைமன்னார் சர்வதேச இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக கோரி இலங்கையைச் சேர்ந்த 4 பைபர் படகு மற்றும் எட்டு இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதே நேரத்தில், அந்த இடத்தில் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்த  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு படகும்   அதிலிருந்து நான்கு மீனவர்கள் என மொத்தம் இலங்கையைச் சேர்ந்த எட்டு மீனவர்கள்,... நான்கு பைபர் படகும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு படகு மற்றும் 4 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பிடிபட்ட தமிழக நாட்டுப் படகில் சுமார் 500 கிலோ கடத்தல் மஞ்சள் மற்றும் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருந்துள்ளது. மேலும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடலோர காவல் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். மேலும் பிடிபட்ட இலங்கை சேர்ந்த எட்டு மீனவர்களை மண்டபம் கடலோர காவல் குழும போலீசாரிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர் 

தகவல் அறிந்து மண்டபம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு  வந்த கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் ஹரிஹரன் இலங்கையை சேர்ந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் மேலும் ஒரே நாளில் இலங்கை சேர்ந்த  நான்கு பைபார் படகும்  மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு படகும் பிடிபட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் சூழலில் கடத்தல் தங்கம் ஏதேனும் கொண்டு வந்தார்களா அல்லது போதை மூலம் ஏதேனும் கடத்தப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் இலங்கை இந்திய மீனவர்களிடம் பேலிசார்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதையும் படிக்க  |  இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை..!