இந்தாண்டு 845 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை ....

டெல்லியில், நூதன முறையில் கடத்தி வரப்பட்டதாக  சுமார் 845 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, நடப்பாண்டில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தாண்டு 845 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை ....

 டெல்லியில் உள்ள   இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், கடத்தல் கும்பல்களின் குருவிகளாக செயல்பட்டு தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவதுண்டு. அந்தவகையில் ஐயன் படப்பாணியில் வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்ததாக, நேற்று 14 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், நடப்பாண்டில் இதுவரை  32 பயணிகளிடம் இருந்து 845 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.