திருப்பதியில் மக்கள் அச்சம்...யானை தாக்கியதில் தம்பதிக்கு நிகழ்ந்த விபரீதம்!

திருப்பதியில் மக்கள் அச்சம்...யானை தாக்கியதில் தம்பதிக்கு நிகழ்ந்த விபரீதம்!

ஆந்திரா மாநிலத்தில் ஒற்றை யானை தாக்கியதில் தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே வெங்கடேஷ் - செல்வி என்ற தம்பதியை ஒற்றை யானை தாக்கியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேசமயம், யானை தாக்கியதில் பஸ்வபள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்கும் பலத்த காயம் அடைந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதையும் படிக்க : "காலை உணவு திட்டத்திற்கு அனைத்து தரப்பிலும் வரவேற்பு" ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத்!

இதுதவிர, ஒரு பசுவும், கன்றும் யானை தாக்கி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர். மறுபுறம், அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  

தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும்,  யானை தாக்கி  தம்பதியினர் மரணம் அடைந்தது அக்கிராமத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.