ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது...

ஜதராபாத் அருகே ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது...

தெலுங்கான மாநிலம் ஜதராபாத் பகுதியில் உள்ள பெடம்பர் பேட் என்ற பகுதியில் ஏராளமான தொழிற்சாலை கிடங்குகள் உள்ளன. இந்நிலையில்  அங்குள்ள ரசாயன கிடங்கு ஒன்றில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன கிடங்கு என்பதால், தீ மளமளவென பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஜே.சி.பி. வாகனம் மூலம் கிடங்கின் சுவற்றில் துளையிட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிடங்கில் யாரும் இல்லாததால், உயிர் தேசம் தவிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கரும்புகை சூழ்ந்தது. ரசாயன புகை என்பதால், அப்பகுதி மக்கள், பெரும் அவதிக்குள்ளாகினர். தீ விபத்து குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.