மன அழுத்தம் காரணமாக மடாதிபதி தற்கொலை... பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்...

உத்தர பிரதேசத்தில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

மன அழுத்தம் காரணமாக மடாதிபதி தற்கொலை... பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்...

அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த மகந்த் நரேந்திரா கிரி, பிரயாக்ராஜ் நகரில் ஒரு மடத்தின் தலைமை மடாதிபதியாகவும் இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ள போலீசார், சம்பவ இடத்தில் 5 பக்க கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். 

அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ள நரேந்திரா கிரி, தமது சீடர் ஆனந்த் கிரி குறித்து வருத்தம் மற்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மடாதிபதி தற்கொலைக்கும் ஆனந்த் கிரிக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, மடாதிபதி மகந்த் நரேந்திரா கிரி மறைவுக்கு, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.