12 ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீச்சு...! வெளியான சிசிடிவி காட்சி...!

12 ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீச்சு...! வெளியான சிசிடிவி காட்சி...!

17 வயது சிறுமி மீது சிறுவன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி துவாரகா பகுதியில் இன்று காலை 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அந்த நேரத்தில், அங்கு பைக்கில் சுற்றி திரிந்த சிறுவர்கள் திடீரென அந்த சிறுவர்கள் மாணவி மீது ஆசிட் வீசியுள்ளனர். 

பின்னர் கதறி துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள், முகத்தில் 7-8 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவளது கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், குற்ற சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் நடைபெறும் போது, சிறுமியின் சகோதரியும் உடனிருந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியபோது, காயமடைந்த சிறுமிக்கு நன்கு தெரிந்த இருவர் தான் இந்த செயலை செய்துள்ளது தெரியவந்தது. அதன்படி, இந்த இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தொடந்து சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தை மீதும் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது, குற்றம் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது எனவும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். 

-- சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணை...!