மழை பாதிப்பு காரணமாக அனைத்து அட்டை தாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்: ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் மழை பாதிப்பு காரணமாக அனைத்து அட்டை தாரர்களுக்கும் நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மழை பாதிப்பு காரணமாக அனைத்து அட்டை தாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும்: ரங்கசாமி அறிவிப்பு

வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய குழுவுடனான சந்திப்பு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 300கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் மழை நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறினார். சிவப்பு நிற அட்டைகளுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.