மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54 ஆவது எழுச்சி நாள்...அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அமித்ஷா!

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54 ஆவது எழுச்சி நாள்...அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அமித்ஷா!

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக் கொண்டார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54 ஆவது எழுச்சி நாள் கொண்டாட்டம், அதன் தலைமையகமான  தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : 6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி... ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று தொழில் பாதுகாப்பு படைப் பிரிவுகளை  பார்வையிட்டார்.

தொடர்ந்து, தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.