வருகிற 18 - ஆம் தேதி வரை விமான சேவை ரத்து...! எந்த ஊருக்கு தெரியுமா...?

வருகிற 18 - ஆம் தேதி வரை விமான சேவை ரத்து...! எந்த ஊருக்கு தெரியுமா...?

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் பயணிகள் பெருமளவு அந்தமானுக்கு சென்று வருகின்றனர். அந்தமானில்  தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்த ஏராளமானவா்கள் வசிப்பதால் அந்தமான் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கி விடும் என்பதால் விமானங்கள் தரையிறங்கவோ புறப்படவோ  முடியாது. இதனால் அந்தமான் விமான நிலையத்தில் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவைகள் இல்லை.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 4ஆம் தேதி வரை அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும் அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணிகள் நடப்பதாலும், அந்தமான் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது 2வது முறையாக ஓடுபாதை சீரமைப்பு, பராமரிப்பு பணி காரணமாக வருகிற 18ஆம் தேதி வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் சென்று வரும் விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவைகளும் வருகிற 18ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் 19ஆம் தேதியில் இருந்து அந்தமானுக்கு சென்னையிலிருந்து விமான சேவைகள் தொடங்கும் என தெரிவித்து உள்ளன.

 அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு  மாற்றுதல் அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை விமான நிறுவனங்கள் செய்து கொண்டதாகவும் இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : சுத்தமான காற்றுக்கு போராடும் கிராமம்... செவி சாய்க்குமா அரசு?