வேலைக்கு ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்..!!

தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் செய்த வேலைக்கு ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல்..!!

தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் செய்த வேலைக்கு ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேச்சல் மாவட்டம் கோச்சாரம் நகரில் வஜ்ரா ஹாஸ்பிடல்ஸ் என்ற தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், ரமேஷ் என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக ரமேசுக்கு மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்ப சூழல் காரணமாக சம்பளத்தை கேட்டுள்ளார்.

சம்பளம் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்த நிலையில் அவரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர்.

இதில் முகம்,  இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.