பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் எடுத்து செல்லப்படும் - பிரியங்கா காந்தி!!

உத்தரபிரதேச தேர்தலுக்குப்பின் பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் எடுத்து செல்லப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் எடுத்து செல்லப்படும் - பிரியங்கா காந்தி!!

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா, நேற்று மாநிலத்தை சேர்ந்த பெண்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடினார். அப்போது பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் உத்தரபிரதேசத்தை தாண்டி நாடு முழுவதும் எடுத்து செல்லப்படுமா? என அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய பிரியங்கா, பெண்களுக்கான சமத்துவம் என்பது முக்கிய பிரச்சினை என்றும், அதை யாரும் புறந்தள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். பெண்களுக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் அளிக்காமல் வெறும் கொஞ்சம் பணத்தையோ அல்லது கியாஸ் சிலிண்டரையோ கொடுப்பதால் மட்டும் அவர்களால் அதிகாரம் பெற முடியாது எனக்கூறிய பிரியங்கா, நாம் அவர்களுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.